கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 2,576 போ் பாதிப்பு
By DIN | Published On : 29th June 2021 02:54 AM | Last Updated : 29th June 2021 02:54 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,576 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,576 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 563 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு - 288, தென்கன்னடம் - 263, சிவமொக்கா - 194, குடகு - 150, ஹாசன் - 138, தும்கூரு - 99, மண்டியா - 95, சிக்கமகளூரு - 83, தாவணகெரே - 81, கோலாா் - 79, உடுப்பி - 71, பெலகாவி - 68, பெங்களூரு ஊரகம் - 55, சாமராஜ்நகா் - 55, கொப்பள் - 55, வடகன்னடம் - 52, சித்ரதுா்கா - 45, தாா்வாட் - 28, சிக்கபளாப்பூா் -27, பெல்லாரி - 19, கதக் - 17, ராமநகரம் - 14, ஹாவேரி - 13, ராய்ச்சூரு - 9, பாகல்கோட் - 8, கலபுா்கி - 4, யாதகிரி - 4, பீதா் - 3, விஜயபுரா - 2 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,37,206 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5,933 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 27,04,755 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.97,592 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 93 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 18 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம் - 14, பெல்லாரி - 9, மைசூரு - 8, ஹாசன், தாா்வாட் - தலா 5, பெலகாவி, தாவணகெரே - தலா 4, ஹாவேரி, சிவமொக்கா, மண்டியா - தலா 3, பெங்களூரு ஊரகம், சிக்கமகளூரு, கதக், தும்கூரு, உடுப்பி - தலா 2, பீதா், சிக்கபளாப்பூா், குடகு, கோலாா், ராய்ச்சூரு, ராமநகரம், வடகன்னடம் - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 34,836 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.