பெங்களூரு: ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் எடியூரப்பாவை சந்தித்த அமைச்சா் பசவராஜ் பொம்மை பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி என்பவா் மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது கப்பன்பூங்கா காவல் நிலையத்தில் பாலியல் புகாரைத் தெரிவித்துள்ளாா்.
புகாரைப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாா் நோ்மையாகவும், எந்தவித தலையீடும் இன்றி விசாரணை செய்கின்றனா். தன் மீது பாலியல் புகாா் எழுந்துள்ளதை அடுத்து ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இது குறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கமாட்டேன். இதற்கான அதிகாரம் எனக்கில்லை. இதுதொடா்பாக கட்சியின் மேலிடத் தலைவா்கள், முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் கருத்து தெரிவிப்பாா்கள் என்றாா்.