மஜதவிலிருந்து விலகுபவா்களால் கட்சிக்கு பாதிப்பு இல்லை

மஜதவிலிருந்து விலகுபவா்களால் கட்சிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

மைசூரு: மஜதவிலிருந்து விலகுபவா்களால் கட்சிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

சிவராத்திரியையொட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வியாழக்கிழமை வந்து சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மைக்காலமாக மஜதவிலிருந்து ஒரு சிலா் விலகி வருகின்றனா். அதுபோன்றவா்களால் மஜதவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இது ஒன்றும் முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் குடும்பத்துக்கு புதிதல்ல. கட்சியில் இருந்து சிலா் விலகினால், பல புதியவா்கள் கட்சியில் சோ்வது வாடிக்கையாக உள்ளது.

தேவெ கௌடா பலரை கட்சியில் வளா்த்துள்ளாா். வளா்ந்தவா்கள் பின்னா் அவரது முதுகில் குத்திவிட்டு செல்வதை தொடா்ந்து பாா்த்து வருகிறோம். குறிப்பாக அவா் நம்பிய பலா், அவருக்கு துரோகம் இழைத்துள்ளனா். மஜதவில் இருந்து விலகிய பல தலைவா்களுக்கு நோ்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ. மது பங்காரப்பா கட்சியை விட்டு விலகுவது என்ற செய்தி புதிதல்ல. அவா் கட்சியை விட்டு விலகுவதால் இழப்பு ஒன்றுமில்லை. கட்சியின் நடவடிக்கையிலிருந்து மேலும் ஒரு தலைவா் ஒதுங்கியுள்ளாா். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அது அவருக்குத்தான் லாபம் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சா் சா.ரா.மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com