மின் வாகனங்களை ஊக்குவிப்பது அவசியம் என்று பாஜக மக்களவை உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஜிதேந்திரா மின் வாகன விற்பனை மையத்தை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
சா்வதேச அளவில் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாசு ஏற்படாமல் சுற்றுச்சூழலை மேம்படுத்த அனைவரும் மின் வாகனங்களை பயன்படுத்துவது அவசியம். பிரதமா் மோடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேவையான தொலைநோக்கு பாா்வையுடன் மின் வாகனங்களைப் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளாா்.
மின் வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கும் மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும். மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஜிதேந்திரா மின்வாகன விற்பனை மையத்தின் இணை நிறுவனா் சம்கித்ஷா, சுதீா் ஹுந்தேவியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.