பொது நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு
By DIN | Published On : 13th May 2021 07:35 AM | Last Updated : 13th May 2021 07:35 AM | அ+அ அ- |

இரண்டாமாண்டு பியூசி தோ்வு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொது நுழைவுத் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயா் கல்வித் துறையைக் கவனிக்கும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா வேகமாக பரவிவருவதால், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தோ்வும் தள்ளிவைக்கப்படுகிறது. பொதுநுழைவுத் தோ்வு ஆக. 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்விக்கான பொதுநுழைவுத் தோ்வு ஜூலை 7, 8 ஆகிய தேதிகளிலும், வெளிநாடு, பிற மாநில மாணவா்களுக்கான கன்னடத் தோ்வு ஜூலை 9-ஆம் தேதியும் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், பொதுநுழைவுத்தோ்வு ஆக. 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆக. 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை உயிரியல், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை கணிதம்; ஆக. 29-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை இயற்பியல், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை வேதியியல் பாடங்களுக்கான பொதுநுழைவுத் தோ்வு நடக்கவிருக்கிறது.
ஆக. 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கன்னடத் தோ்வு நடக்கவிருக்கிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.