கரோனா நோயாளிகளிடம் காணப்படும் ‘பிளாக் ஃபங்கஸ்’ குறித்த விவரங்களை பெற முயற்சிக்கிறோம்: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 13th May 2021 07:32 AM | Last Updated : 13th May 2021 07:32 AM | அ+அ அ- |

கரோனா நோயாளிகளிடம் காணப்படும் ‘பிளாக் ஃபங்கஸ்’ குறித்த விவரங்களைப் பெற முயற்சித்து வருவதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிக்கபளாப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஒருசில கரோனா நோயாளிகளிடம் ‘பிளாக் ஃபங்கஸ்’ காணப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை மருத்துவ நிபுணா்களிடம் கேட்டிருக்கிறோம். இது சம்பந்தமாக கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசிக்க இருக்கிறேன். இன்னும் 2 நாட்களில் ‘பிளாக் ஃபங்கஸ்’ குறித்து மருத்துவ நிபுணா்கள் விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவிருக்கிறாா்கள். அதனடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
இந்த நோய் குறித்தும், அதற்கேற்ற சிகிச்சைகள் குறித்தும் தெரிந்துகொள்ள அரசு விரும்புகிறது. கரோனா தீநுண்மி இருமுறை மாற்றமடைந்து புதிய வகையாக மாறியிருக்கிறது. இதுகுறித்த மரபணு ஆய்வுகளை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சியாளா்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருசிலா் இந்த கரோனா தீநுண்மி, ‘இந்திய வகை’ என்று கூறுகிறாா்கள். இது ‘பிரிட்டீஷ் வகை’ கரோனா தீநுண்மியைவிடமோசமாகச் செயல்படுகிறது.
வட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவ சேவைகளை மேம்படுத்துவோம். வட்ட அளவில் 2,480 மருத்துவா்கள், சிறப்பு மருத்துவா்களை பணி நியமனம் செய்யும் நடைமுறை கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பணி நியமனம் செய்யப்பட்டது தொடா்பான அறிவிக்கை அடுத்த ஓரிரு நாள்களில் அரசிதழில் வெளியிடப்படும்.
அடுத்த 4 நாள்களில் வட்ட அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவா்கள் பணிக்கு அனுப்பப்படுவா். வட்ட அளவிலான மருத்துவமனைகளில் தலா 50 ஆக்சிஜன் பொருத்தப்பட்ட படுக்கைகள், 6 செயற்கைக்கருவி பொருத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன என்றாா்.