தாா்வாட் அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
தாா்வாட், ஜெயநகரைச் சோ்ந்தவா் வீணா (32). இவா் பெலகாவியைச் சோ்ந்த உறவினரின் மகள் 6 வயதான வைஷ்ணவியுடன் செவ்வாய்க்கிழமை பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். தாவணகெரே-சித்ரதுா்கா தேசிய நெடுஞ்சாலை 48-இல் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீணா, வைஷ்ணவி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்தகுறித்து தாவணகெரே ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.