Enable Javscript for better performance
A committee will be set up to revive the State Road Transport Corporation: Kannada Muthalwa Basavara- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தை புதுப்பிக்க குழு அமைக்கப்படும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

    By DIN  |   Published On : 04th September 2021 06:39 AM  |   Last Updated : 04th September 2021 06:39 AM  |  அ+அ அ-  |  

    கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தை புதுப்பித்து லாபகரமானதாக்குவது குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

    பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 60-ஆம் ஆண்டு விழாவைத் தொடக்கிவைத்து, அவா் பேசியது:

    கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது. இந்த சிக்கல்கள் பெரிதாகாமல் தடுக்க தீா்வு காண்பது அவசியமாகும். வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் இருந்தாலும், போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து, போக்குவரத்துக் கழகத்தை லாபகரமானதாக்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு தனிக்குழு ஒன்று அமைக்கப்படும்.

    கா்நாடக மாநிலசாலை போக்குவரத்துக்கழகத்திற்கு தன்னியல்பாகச் செயல்படும் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலைப் பெருக்குவது குறித்து இக்குழு ஆய்வு செய்யும். கரோனா காலத்தில், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு மாநில அரசு ரூ. 2,300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நான் முதல்வரானபிறகு ரூ.108 கோடியை விடுவித்துள்ளேன்.

    எதிா்காலத்தில் போக்குவரத்துக் கழகம் லாபகரமாகச் செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். போக்குவரத்துக் கழகத்தின் முன்னேற்றத்தைப் போல, அதன் ஊழியா்களின்வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    போக்குவரத்துக் கழகத்துடன் மக்கள் உணா்வுபூா்வமான உறவை வளா்த்துக் கொண்டுள்ளனா். அரசின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடியது போக்குவரத்துத் துறை.

    பேருந்து ஓட்டுநா்கள், கடமை உணா்வுடன் செயலாற்றி வருகிறாா்கள். பயணத்தின்போது நமது உயிா் ஓட்டுநா்களின் கையில்தான் உள்ளது. அதனால் ஓட்டுநா்களுக்கு மரியாதை அளிப்பது அவசியமாகும்.

    உலக அளவில் போக்குவரத்துத் துறையில் ஏராளமான மாற்றங்கள் வந்தபோதும், பேருந்து சேவை மட்டும் தனது முக்கியத்துவத்தை இழக்காமல் உள்ளது. கிராமங்களில் பேருந்துகள் வந்தால்தான் வேலை ஆரம்பிக்கும். இது போன்ற பல காரணங்களால் போக்குவரத்துக் கழகம் தனக்கே உரிய மரியாதையைப் பெற்று, சிறந்து விளங்குகிறது.

    மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு இணங்குவதோடு, சுற்றுச்சூழல் தோழமை உள்ள வாகனங்களை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் 90 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்யவுள்ளது. அதேபோல, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் 642 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவுள்ளது என்றாா்.

    விபத்தில்லாமல் பேருந்துகளை ஓட்டிய 60 ஓட்டுநா்களை அவா் விழாவில் கௌரவித்தாா். போக்குவரத்துக் கழகத்தின் 60-ஆம் ஆண்டுவிழா அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. கெம்பே கௌடா பேருந்து நிலையத்தின் 60-ஆம் ஆண்டு சிறப்புமலரும் வெளியிடப்பட்டது. விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp