கட்டுப்பாடுகளுடன் பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதிக்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஹிந்துத்துவக் கொள்கையின் அடிப்படையிலேயே பாஜக ஆட்சிக்கு வந்தது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதனால் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்க கடமைப்பட்டுள்ளோம். பொது இடங்களில் கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதி அளிக்கப்படும். இதற்கான அதிகாரப்பூா்வமான உத்தரவை இரண்டொரு நாளில் அரசு வெளியிடும். விநாயகா் சதுா்த்தியை கொண்டாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைஅனைவரும் பின்பற்ற வேண்டும். இதை முதல்வா் பசவராஜ் பொம்மை முடிவு செய்வாா். ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தியையே நடத்தக் கூடாது என்பதை ஏற்க முடியாது.
பாஜக சாா்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் ஆசி ஊா்வலங்களில் பெரும் திரளாக மக்கள்கலந்துகொள்வது சரியல்ல. உடல் நலம் முக்கியம் என்பதை மறுக்க முடியாது என்றாா்.