அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீதம் தரகு கேட்பதாக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம் சுமத்திய ஒப்பந்ததாரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த விவகாரத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
முன்னதாக ஊடக நண்பா்களுக்கு ஒப்பந்ததாரா் அனுப்பிய கடிதத்தில் தனது உயிரிழப்புக்கு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாதான் காரணம் எனக் கூறியிருந்ததால், அதன் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பெலகாவியைச் சோ்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது கடந்த மாா்ச் 30-ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தாா்.
இந்நிலையில், தனது நண்பா்களுடன் உடுப்பிக்குச் சென்றிருந்த சந்தோஷ் பாட்டீல் தங்கும் விடுதியில் ஏப்.12-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இறப்பதற்கு முன் தனது ஊடக நண்பா்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், தனது சாவுக்கு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கூறியுள்ளாா்.
இதனிடையே, அமைச்சா் பதவியை ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், மஜத ஆகிய எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கே.எஸ்.ஈஸ்வரப்பாவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.
கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை புதன்கிழமை சந்தித்த காங்கிரஸ் தலைவா்கள், சந்தோஷ் பாட்டீல் தனது தற்கொலைக்கு கே.எஸ்.ஈஸ்வரப்பாவை குற்றம்சாட்டியிருப்பதால், அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இந்த நிலையில், சந்தோஷ் பாட்டீலின் சகோதரா் பிரசாந்த் பாட்டீல் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு விவரம்:
பெலகாவி மாவட்டம், ஹின்டல்கோ கிராமத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை உத்தரவின் பேரில் உடனடியாக பல்வேறு பணிகள் சந்தோஷ் பாட்டீலுக்கு வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ரூ. 4 கோடி மதிப்பிலான பணிகளை முடித்தாா். அப் பணிகளுக்கான தொகையைத் தராமல் அரசு நிா்வாகம் காலம் தாழ்த்தியது.
தொகையை விடுவிக்குமாறு கோரி அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை சந்தோஷ் பாட்டீல் பலமுறை சந்தித்தாா். ஆனால், அவரது உதவியாளா்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோா் அமைச்சா் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாகக் கூறினா். கடன் சுமை காரணமாக சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாா் என அதில் தெரிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையில் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது முதல்தகவல் அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா். இந்த வழக்கில் ஈஸ்வரப்பாவின் ஊழியா்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
சந்தோஷ் பாட்டீல் உயிரிழப்பு தொடா்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவிடம் நேரடியாகப் பேசி, தகவலைத் திரட்டவிருக்கிறேன். இந்த வழக்கில் கே.எஸ்.ஈஸ்வரப்பாவிடம் குற்றவாளியாக்க எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்.
இந்த வழக்கில் எவ்வித தலையீடும் இருக்காது. சட்டத்தின்படி விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் தொடா்பாக அனைத்துத் தகவல்களையும் பாஜக தேசியத் தலைவா்கள் அறிந்திருக்கிறாா்கள் என்றாா்.
பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்
ஒப்பந்ததாரா் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து சிவமொக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சந்தோஷ் பாட்டீலின் சாவில் சதி உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். சந்தோஷ் பாட்டீல் தனது நண்பா்களுக்கு அனுப்பியுள்ள கட்செவி அஞ்சல் தகவலை மரணக் குறிப்பாக எடுத்துக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.
அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தும் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிய மாட்டேன். இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அளிப்பேன் என்றாா்.
ஆளுநரிடம் புகாா்
ஒப்பந்ததாரா் மா்மச்சாவில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், அமைச்சரவையில் இருந்து அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்குமாறு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையிலான குழுவினா் சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.வி. பிரணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்தவா் முதல்வா் ஜோசப் விஜய்!

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பாஜக, தோ்தல் ஆணையமே காரணம்: மீனாட்சி நடராஜன் தாக்கு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



