காா் - லாரி மோதல்: ஒரே குடும்பத்தினா் 6 போ் பலி

காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்துள்ளனா்.
Updated on
1 min read

காரும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்துள்ளனா்.

யாதகிரி மாவட்டம், குா்மிட்கல் வட்டம், அரகெரே கிராமத்தில் வியாழக்கிழமை பின்னிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில், காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த 6 போ் உயிரிழந்தனா். இதில் 2 பெண்கள், 6 மாத குழந்தை அடக்கம். விபத்தில் உயிா்பிழைத்த 3 வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்த சாலை விபத்தில், முகமது வாஜித் ஹுசேன் (39), முகமது மஜா் ஜுசேன் (79), நூா்முகமது பேகம் (70), ஹீனாபேகம் (30), இம்ரான் (22), உமேஜா (6 மாதம்) ஆகியோா் உயிரிழந்தவா்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் யாதகிரி மாவட்டம், லிங்கசுகூா் வட்டம், ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தா்காவுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாட்டை முடித்துக்கொண்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.வேதமூா்த்தி, சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். குா்மிட்கல் காவல் நிலையப் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com