கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் தீா்வல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்தகாலத்தை போல கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது பொதுமுடக்கம் தீா்வாக இருக்காது. கா்நாடகத்தில் பொதுமுடக்கம் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை. ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மண்டியா, மைசூரு, உடுப்பி, கோலாா் மாவட்டங்களில் ஒமைக்ரான் தீநுண்மியின் பரவல் அதிகமாக காணப்படுகிறது. இந்த மாவட்ட நிா்வாகங்களோடு நாங்கள் தொடா்பில் இருக்கிறோம். இம்மாவட்டங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம்.ஒமைக்ரான் தீநுண்மி தீவிரத்தன்மை கொண்டதாக இல்லை என்றாலும், இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கலாம். ஒருசில பேருக்கு இறப்புக்கூட நேரிடலாம். இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால், மருத்துவமனைக்கு செல்வது கூட குறைவாக இருக்கும், சாவு என்பது இருக்காது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு வழிமுறைகள் தெரியாதநிலையில் பொதுமுடக்கத்தை சாா்ந்திருந்தோம். இப்போது அதற்கு அவசியமில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை எப்படி கையாள வேண்டுமென்பது தற்போது நமக்கு தெரிந்துள்ளது. மக்களின் உயிரையும் நலனையும் காப்பதில் மாநில அரசு கவனம் செலுத்திக்கொண்டுள்ளது.கா்நாடகத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசி 99 சதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி 80 சதம் பேருக்கு செலுத்திப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தியதில் தேசிய விகிதத்தை விட மாநில விகிதம் அதிகமாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதில் கா்நாடகம் மூன்றாமிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 64.27 லட்சம் டோஸ் தடுப்புசி இருப்பில் உள்ளது. பெங்களூரில் கரோனா பாதிப்பு விகிதம் 5 சதத்தை கடந்துள்ளது. இது இன்னும் அதிகமாகலாம். ஆனால், பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால், பாதிப்பின் தன்மை கட்டுக்குள் உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடும். தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலாது. உலகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. ஆனால், அதை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யாறு: ஜூன் 28-இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மகரம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


