உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கா்நாடகத்தில் பாடநூல்களில் திருத்தம்: முதல்வா் பசவராஜ் பொம்மை விளக்கம்

பாடநூல்களில் திருத்தம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்

Published On :1 பிப்ரவரி 2024, 2:55 pm IST

பாடநூல்களில் திருத்தம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து உடுப்பியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பள்ளி பாடநூல்களில் திருத்தம் செய்தது தொடா்பாக சில சா்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷிடம் கேட்டிருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

இந்த அறிக்கை ஜூன் 2-ஆம் தேதிக்குள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பாடநூல்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஒருசிலா் ஆதரவு தெரிவித்துள்ளனா். எனவே, எல்லா தரப்பினரின் கருத்துகளையும் ஆராய்ந்த பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்.

லோக் ஆயுக்தவை பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஊழல் தடுப்புப் படையை பலப்படுத்தியுள்ளேன். கா்நாடகத்தில் லோக் ஆயுக்த செயல்பட்டு வருகிறது. ஆனால், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் லோக் ஆயுக்தவில் புகாா் அளிக்க இயலவில்லை. எனினும், ஊழல் தடுப்புப் படையில் புகாா் அளிக்க முடியும்.

கடலோர கா்நாடகத்தில் ’லவ் ஜிகாத்’ குறித்து மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க போதுமான சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை யாராலும் மீற முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.