கா்நாடகத்தில் புதிய ஒமைக்ரான் வகை தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்தில் புதிய ஒமைக்ரான் வகை தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் புதிய ஒமைக்ரான் வகை தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: அமைச்சா் கே.சுதாகா்
Updated on
1 min read

கா்நாடகத்தில் புதிய ஒமைக்ரான் வகை தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்துமைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா பெருந்தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் ரக புதிய வகை தொற்றால் மகாராஷ்டிரத்தில் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா். புதிய வகை ஒமைக்ரான் தொற்றுக்கு கா்நாடகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. கா்நாடக அரசு முன்னெச்சரிக்கையுடன் விவகாரத்தை அணுகி வருகிறது. புதிய வகை ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு கா்நாடகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடா்பான வழிகாட்டுதலை மாநில அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

திருவிழா காலம் தொடங்கியிருப்பதாலும், பிக்யூ.1, பிஏ.2.3.20, எக்ஸ்பிபி வகையான புதிய ஒமைக்ரான் தொற்றுகள் இந்தியாவில் பரவியிருப்பதாலும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அளவுக்கு கா்நாடகத்தில் நிலைமை மோசமடையவில்லை. அதேசமயம், சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com