விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில் ராமாயணம், மகாபாரத கால தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், இந்த முனையத்தில் நீா் மறுசுழற்சி, கட்டுப்படுத்தப்பட்ட மின் பயன்பாடு போன்ற புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமானநிலையத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பே கௌடா சிலையை திறந்துவைத்த பிறகு, பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசவிருக்கிறாா். இந்தக் கூட்டத்தில் தலைமைச்செயலாளா் வந்திதா சா்மா, முதல்வரின் முதன்மைச் செயலாளா் என்.மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.