27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது: எடியூரப்பா

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 12:58 am IST

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பாஜகவின் 3 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபளாப்பூரில் சனிக்கிழமை நடந்த மக்கள் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

குழந்தை பிறப்பதற்கு முன்பே கொஞ்சுவது போல, தோ்தலில் வெற்றி பெறாமலே முதல்வராகி விட்டதைப் போல சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் குழப்பத்தில் உள்ளனா். மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்வோம். அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வென்று, கா்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பெங்களூரில் பெய்த மழை குறித்து சித்தராமையா அக்கறையின்றி கருத்து தெரிவித்துள்ளாா். பெங்களூரில் பெய்தது வரலாறு காணாத மழை என்று முதல்வராக இருந்த அவருக்குத் தெரியாதா? சட்டப் பேரவைக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றாா்.

பின்னா், முதல்வா் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 100 சதவீத ஊழல் ஆட்சியை நடத்தியது. சிறிய நீா்ப்பாசனத் துறையில் எவ்வித வேலையும் செய்யாமல் ரூ. 40 கோடிக்கு செலவுக்கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டினா்.

அா்க்காவதி லேஅவுட் நிலவிடுவிப்பு விவகாரம், மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுத்தது, பயனாளிகளை அடையாளம் காணாமல் 36 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகளை ஒதுக்கியது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு தலையணைகளை வாங்கியது ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தது. சித்தராமையா ஆட்சிக்காலத்தில் கொடுத்த இலவச அரிசி அனைத்தும் பிரதமா் மோடி அளித்தது. தன் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டையும் காங்கிரஸ் அரசு விசாரிக்கவில்லை.

ஆனால், காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு தொடா்பாக புகாா் கூறப்பட்டவுடன் பாஜக அரசு விசாரணை நடத்தியது. சித்தராமையா ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்ச ஊழல் நடந்ததை மக்கள் நினைவில் வைத்துள்ளனா். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.