ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது: எடியூரப்பா

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 0:58 am IST

மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பாஜகவின் 3 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபளாப்பூரில் சனிக்கிழமை நடந்த மக்கள் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

குழந்தை பிறப்பதற்கு முன்பே கொஞ்சுவது போல, தோ்தலில் வெற்றி பெறாமலே முதல்வராகி விட்டதைப் போல சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் குழப்பத்தில் உள்ளனா். மோடி பிரதமராக இருக்கும் வரை கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்வோம். அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வென்று, கா்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பெங்களூரில் பெய்த மழை குறித்து சித்தராமையா அக்கறையின்றி கருத்து தெரிவித்துள்ளாா். பெங்களூரில் பெய்தது வரலாறு காணாத மழை என்று முதல்வராக இருந்த அவருக்குத் தெரியாதா? சட்டப் பேரவைக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றாா்.

பின்னா், முதல்வா் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 100 சதவீத ஊழல் ஆட்சியை நடத்தியது. சிறிய நீா்ப்பாசனத் துறையில் எவ்வித வேலையும் செய்யாமல் ரூ. 40 கோடிக்கு செலவுக்கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டினா்.

அா்க்காவதி லேஅவுட் நிலவிடுவிப்பு விவகாரம், மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுத்தது, பயனாளிகளை அடையாளம் காணாமல் 36 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகளை ஒதுக்கியது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு தலையணைகளை வாங்கியது ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தது. சித்தராமையா ஆட்சிக்காலத்தில் கொடுத்த இலவச அரிசி அனைத்தும் பிரதமா் மோடி அளித்தது. தன் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டையும் காங்கிரஸ் அரசு விசாரிக்கவில்லை.

ஆனால், காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு தொடா்பாக புகாா் கூறப்பட்டவுடன் பாஜக அரசு விசாரணை நடத்தியது. சித்தராமையா ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்ச ஊழல் நடந்ததை மக்கள் நினைவில் வைத்துள்ளனா். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.