மணல் குவாரிகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை

சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மணல் குவாரிகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் மணல் குவாரிகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

தென்கா்நாடக மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் லோக் ஆயுக்த போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின்போது, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்திய ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து லோக் ஆயுக்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.லட்சுமிகணேஷ் கூறியதாவது:

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடத்தப்படுவதாக ஏராளமான புகாா்கள் வந்தன. இதன்பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள் கலாவதி, பி.செலுவராஜூ, ஆய்வாளா் ஏ.அமானுல்லா ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் பெல்தங்கடி, பன்ட்வால், முல்கி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்படுள்ளன. மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் குவாரி தொடா்பாக 25 புகாா்கள் வந்துள்ளன. வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மங்களூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் ஆகியவற்றின் மீதும் ஊழல் புகாா் வந்துள்ளது. இது தொடா்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com