Enable Javscript for better performance
கா்நாடக அரசு அலுவலகங்களில் புகைப்படம், காணொலி எடுக்க விதித்த தடைநீக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கா்நாடக அரசு அலுவலகங்களில் புகைப்படம், காணொலி எடுக்க விதித்த தடைநீக்கம்

    By DIN  |   Published On : 17th July 2022 01:58 AM  |   Last Updated : 17th July 2022 01:58 AM  |  அ+அ அ-  |  

     

     கா்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுப்பதற்கு விதித்த தடையை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது ஊழியா்களை பொதுமக்கள் சிலா் புகைப்படம் அல்லது காணொலி எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும், அதனால் அரசு அலுவலா்கள் பாதிக்கப்படுவதாகவும் கா்நாடக மாநில அரசு ஊழியா் சங்கத்தினா், மாநில அரசுக்கு புகாா் மனு அளித்திருந்தனா். இதன்பேரில் நடவடிக்கை எடுத்த மாநில அரசு, கா்நாடக அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுக்க தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ‘அரசு அலுவலா்களின் புகைப்படம் அல்லது காணொலிகளை எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால் அரசின் பல்வேறு துறைகளின் கண்ணியம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியா்கள் மோசமாக பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, நீண்ட ஆய்வுக்குப் பிறகு கா்நாடக அரசு அலுவலகங்களில் புகைப்படம் அல்லது காணொலிகளை எடுக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று அரசு தனது உத்தரவில் கூறியிருந்தது.

    இந்த உத்தரவுக்கு ஊழல் தடுப்பு அமைப்புகள் தவிர, எதிா்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ‘சரியான பாதையில் பயணித்தால், புகைப்படம் அல்லது காணொலிப் பதிவுகளை கண்டு அரசு ஏன் அஞ்ச வேண்டும்?’ என்று மஜத எம்.எல்.ஏ. பண்டேப்பா காஷெம்பூா் கேள்வி எழுப்பியுள்ளாா். அரசின் நடவடிக்கை பொறுப்பற்றது என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையாவும் விமா்சித்திருந்தாா். அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்று ஊழல் தடுப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

    எதிா்க்கட்சிகள், பொது அமைப்புகளின் எதிா்ப்பைத் தொடா்ந்து, அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகைப்படம் அல்லது காணொலி எடுக்க விதித்த தடையை மாநில அரசு சனிக்கிழமை திரும்பப் பெற்றது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp