50 சதவீத தள்ளுபடியில் கன்னட நூல்கள் விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.

இது குறித்து குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதிவரை தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சத தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவுசெய்து, அந்த விற்பனை நடந்து வருகிறது.

இந்த நூல்களை இணையதளத்தில் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23183312 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com