சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.
இது குறித்து குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதிவரை தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சத தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவுசெய்து, அந்த விற்பனை நடந்து வருகிறது.
இந்த நூல்களை இணையதளத்தில் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23183312 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.