பெங்களூரில் மே 13-ஆம் தேதி முதல் இலவச காய்கறி அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால் பாக் பூங்காவில் உள்ள எம்.எச்.மரி கௌடா நினைவு அரங்கத்தில் ஜூன் 17-ஆம்தேதி முதல் காய்கறி அலங்காரப் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. ஜூன் 17-ஆம் தேதி நண்பகல் 2.30 மணிக்கு 10 நாள்களுக்கு பயிற்சிமுகாம் தொடங்கும்.
இந்த முகாமில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் கலந்துகொள்வோா் நேரடியாக முகாமிற்கு வருகைதரலாம். மேலும் விவரங்களுக்கு 080 - 26576781, 77604 98925 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.