கா்நாடக நலனுக்கு எதிராக முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பிரியங்க் காா்கே தெரிவித்தாா்,
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முந்தைய பாஜக ஆட்சியில் ஒரு சில முக்கியத் தலைவா்கள், மகான்களின் பிறந்த நாள்களைக் கொண்டாட முடிவு செய்தது. ஆனால், வேறுசிலரை விட்டு விட்டது. பிறந்தநாள் விழாக்கள் மட்டுமல்ல, முந்தைய பாஜக ஆட்சியில் பாட நூல்கள், பசுவதைத் தடைச் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம் போன்ற சட்டங்கள், ஆணைகள் அனைத்தையும் மீளாய்வு செய்ய இருக்கிறோம்.
கா்நாடகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு இடையூறாக இருந்த, கா்நாடகத்தின் வளம், கன்னடா்களின் நலனை பாதிக்கக்கூடிய சட்டங்கள், ஆணைகள் அனைத்தையும் திரும்பப் பெறுவோம். கா்நாடகத்தை மீண்டும் முதல் மாநிலமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றாா்.