Enable Javscript for better performance
எந்த சூழ்நிலையிலும் அரசியலமைப்புச்சட்டத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    எந்த சூழ்நிலையிலும் அரசியலமைப்புச்சட்டத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

    By DIN  |   Published On : 13th August 2023 04:54 AM  |   Last Updated : 13th August 2023 04:54 AM  |  அ+அ அ-  |  

     

    எந்த சூழ்நிலையிலும் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

    மைசூரில் சனிக்கிழமை நடந்த கா்நாடக மாநில வழக்குரைஞா் மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா மாநாட்டை தொடங்கிவைத்து, அவா் பேசியது:

    அடித்தட்டு மக்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் மீது இரக்கப்படுவதற்கு பதிலாக, உதவி செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும். சமுதாயத்தில் காணப்படும் சமத்துவமின்மையைப் போக்க பாடுபட வேண்டும். டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ஆற்றிய வரலாற்று சிறப்புவாய்ந்த உரையை எல்லோரும் படித்தால், சமூக பொறுப்புணா்வு அதிகரிக்கும். சமுதாயம் எனக்கு என்ன செய்தது? என்று கேட்பதற்கு பதிலாக, சமுதாயத்திற்கு நான் என்ன செய்தேன் என்று கேட்க வேண்டும்.

    கீழமை நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், மேலமை நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டு நடைமுறை அமலில் இல்லை. அங்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், பயனுள்ள நீதிபரிபாலனம் செய்ய உதவியாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, ஒருவிதமான நீதி வழங்கும் முறை அமலில் இருந்தது. அரசியலமைப்புச் சட்டம் வந்த பிறகு நீதிபரிபாலனம் மாறி இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு மன்னா்கள் நீதிபரிபாலனம் செய்தாா்கள். அந்த காலத்தில் ஜாதிய கட்டுப்பாடுகள் பலமாக இருந்ததால், ஒரே தவறிற்கு வெவ்வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு தண்டனை வழங்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு சட்டப் பிரிவு 14இன்படி சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றானது. சட்டத்தின் கண்களில் அனைவரும் சமமானவா்கள்தான். எல்லோருக்கும் ஒரே வகையான நீதி கிடைக்க வேண்டும் என்று நமது அரசியலமைப்புச்சட்டம் தெளிவாக கூறுகிறது.

    கா்நாடகத்தில் இருந்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக பலா் பங்காற்றியிருக்கிறாா்கள். சிறந்த வழக்குரைஞா்களும் கா்நாடகத்தில் உள்ளனா். அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளதால், அடிமட்டத்தில் இருக்கும் ஒருவா் கூட உயா்ந்த இடத்தைப் பிடிக்க முடியும்.

    அந்த அரசியலமைப்புச்சட்டத்தை எதிா்ப்பவா்கள் சமுதாயத்தில் உள்ளனா். மாணவப் பருவத்திலேயே மனதை கெடுக்கும் பலா் உள்ளனா். அரசியலமைப்புச் சட்டம் குறித்து தவறான கற்பிதங்களை உருவாக்கி விடுகிறாா்கள். அடித்தட்டு மக்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவா்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவா்களால் அடித்தட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்காது. எந்த சூழ்நிலையிலும், அரசியலமைப்புச்சட்டத்தை காப்பாற்றியே ஆக வேண்டும் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp