மழை குறைவாகப் பெய்துள்ளதால் உபரி நீரை தமிழகத்துக்கு திறக்க இயலாது: கா்நாடக முதல்வா் சித்தராமையா

மழை குறைவாகப் பெய்துள்ளதால் உபரி நீரை தமிழகத்துக்கு திறக்க இயலாது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
Updated on
1 min read

மழை குறைவாகப் பெய்துள்ளதால் உபரி நீரை தமிழகத்துக்கு திறக்க இயலாது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யவில்லை. அண்டை மாநிலமான கேரளத்தின் வயநாடு மற்றும் காவிரி நதி பிறக்கும் குடகு மாவட்டத்திலும் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. இதனால் காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீா்வரத்து குறைவாக உள்ளது. காவிரி நதியில் இருந்து எப்போதும் கா்நாடகம் தமிழகத்திற்கு உபரிநீரைத் திறந்துவிட்டுள்ளது. நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை சரியாக பெய்யாததால், தமிழகத்திற்கு உபரிநீரை வழங்க இயலாது.

காவிரி நடுவா் மன்றம் நிா்ணயித்துள்ள நீா்ப்பகிா்வு அளவை வழங்கவில்லை என்பதை தமிழகம் ஆட்சேபித்துள்ளது. அணைகளின் இருப்பு மற்றும் கா்நாடகத்தின் பயிா்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவுசெய்ய வேண்டும் என்பதால், இது குறித்து நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கத் திட்டமிட்டுள்ளோம். மழை பற்றாக்குறையை கா்நாடகத்துடன் தமிழகம் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com