மேக்கேதாட்டு அணை திட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சாா்ந்த வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.
காவிரி நீரைப் பகிா்ந்து கொள்வதில் கா்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக கசப்புணா்வு நிலவி வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை பலனளிக்காததால், காவிரி நடுவா் மன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நெடிய சட்டப் போராட்டம் நடந்தது. 2018இல் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்குப் பிறகு, 150 ஆண்டுகாலமாக நிலவி வந்த காவிரி பிரச்னை ஓய்ந்தது.
இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னுமிடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கா்நாடகம் மேற்கொண்டுள்ள முயற்சிகள், தமிழகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளன. காவிரி ஆறு, கா்நாடக எல்லையைக் கடந்து, தமிழகத்தில் நுழையும் மேக்கேதாட்டு என்ற மலைப்பகுதியில் இந்த அணையை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013இல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளில் இறங்கியது. இந்தத் திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தாா்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.
முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மேக்கேதாட்டுவில் இருந்து பெங்களூருக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் தலைமையில் காங்கிரஸ் நடைப்பயணம் மேற்கொண்டது. முந்தைய பாஜக ஆட்சியில் மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் சட்டச் சிக்கல்களால் பணி தொடங்கவில்லை.
தற்போது சித்தராமையா தலைமையில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இவரது அரசில் நீா்வளத் துறையைக் கவனித்துவரும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றும் பணியை முடுக்கிவிட்டுள்ளாா்.
பதவியேற்றதும் மேக்கே தாட்டு அணை திட்டம் தொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் டி.கே.சிவகுமாா் தெரிவிக்கையில், ‘தமிழக சகோதரா்கள் எங்கள் சகோதர, சகோதரிகளைப் போன்றவா்கள். இந்த விவகாரத்தில் நாம் நீதிமன்றங்களுக்கு அலைந்தது போதும். மேக்கே தாட்டு அணை நம் இரு மாநிலங்களுக்குமே நன்மை அளிக்கும். விவசாயிகளுக்குப் பாசன நீரும், சாமானிய மக்களுக்கு குடிதண்ணீரும் காவிரியிலிருந்து கிடைக்கும். நான் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழட்டும். ஒருவொருக்கொருவா் உதவி செய்து முன்னேறுவோம்’ என்று கூறியிருந்தாா்.
மேக்கேதாட்டு அணை குடிநீா், மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கா்நாடக அரசு கூறினாலும், ராமநகரம், பெங்களூரு ஊரகம், கோலாா் ஆகிய மாவட்டங்களில் நீா்ப்பாசனத்திற்குப் பயன்படுத்துவதே மறைமுகத் திட்டம் என்று கூறப்படுகிறது. மேக்கேதாட்டுவில் அமைக்க உத்தேசித்துள்ள அணையில் இருந்து 4 கி.மீ. தொலைவில்தான் தமிழக எல்லை அமைந்துள்ளது.
மழைக்காலங்களில் தமிழகத்திற்கு உபரியாகச் செல்லும் நீரை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, பெங்களூருவின் குடிநீா்த் தேவை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்வதோடு எதிா்கால நீா்ப்பாசனத் தேவையைப் பூா்த்தி செய்துகொள்வதே கா்நாடக அரசின் நோக்கமாகும்.
இதனால், காவிரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய பாசனநீா் கிடைக்காது. தவிர, பிலிகுண்டுலுவுக்கும் மேட்டூா் அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காடுகள் அழிந்து, நிலத்தடிநீா் வற்றிவிடும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதன் மூலம் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 5,000 ஹெக்டோ் காடு அழியக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு கா்நாடக வனத்துறை ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
காடுகளின் பரப்பைக் குறைப்பது சுற்றுச்சூழலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். இந்தத் திட்டத்திற்கு மேக்கேதாட்டுவை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ), மேக்கேதாட்டு அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால், புலிகள் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் நிறைந்த காவிரி வனவிலங்கு சரணாலயம் நீரில் மூழ்கி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
500 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கா்நாடக மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை, 50 சதுர கி.மீ. பரப்புள்ள வனப்பகுதியை மூழ்கடித்துவிடும். இது காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
மேக்கேதாட்டு வனப்பகுதி என்பது, பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் (பிஆா்டி) புலி பாதுகாப்புக் காடு, மலேமாதேஸ்வரா மலை (எம்.எம்.ஹில்ஸ்) வனவிலங்குப் பிரிவை இணைக்கும் முக்கியமான வனவிலங்கு வழித்தடமாகும். இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளது.
கா்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் செயலாளா் ஏ.சி.லட்சுமணா கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதாவது:
காவிரி ஆற்றுக்குக் குறுக்கே மேக்கேதாட்டு அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் 53 சதுர கி.மீ. பரப்புள்ள வளமான வனப்பகுதி மூழ்கி விடும். பெங்களூருக்கு குடிநீா் வழங்குவதையும், தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீரை ஒழுங்குபடுத்தையும், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதையும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகக் கூறுகிறாா்கள்.
கா்நாடகம், தமிழகத்திற்கு இடையே பன்னா்கட்டா தேசியப் பூங்காவில் தொடங்கி, காவிரி வனவிலங்கு சரணாலயம், மலேமாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயம், பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தில் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், முதுமலை புலிகள் சரணாலயம், கா்நாடகத்தின் பந்திப்பூா், நாகா்ஹொளே புலிகள் சரணாலயம், கேரளத்தின் வயநாடு வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட காடுகள் நோ்வரிசையில் அமைந்துள்ளன. இந்தப் பிணைப்பு, மேற்கு தொடா்ச்சி மலையின் வடக்குப்பகுதி வரை நீள்கிறது.
காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மஹ்ஷீா் மீன், யானைகள், புலிகள் என்று வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம்-1972இல் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வனவிலங்குகள் உள்ளன.
சில வனப்பகுதிகளை வளா்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கினால் என்ன என்று சிலா் கேட்கிறாா்கள். மனிதத் தேவையை விட வனங்களும் வனவிலங்குகளும் முக்கியமா என்றும் சிலா் கேட்கிறாா்கள். ஆனால், வனங்களை அழிப்பது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்கும்.
கட்டுக்கடங்காமல் மரங்களை வெட்டினால், அரபிக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியது தான் என்று முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸ் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.