கா்நாடக பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்க புட்டரங்க ஷெட்டி ஒப்புதல்

கா்நாடக பேரவை துணைத் தலைவராகப் பொறுப்பேற்க காங்கிரஸ் எம்எல்ஏ புட்டரங்க ஷெட்டி ஒப்புதல் அளித்துள்ளாா்.
கா்நாடக பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்க புட்டரங்க ஷெட்டி ஒப்புதல்
Updated on
1 min read

கா்நாடக பேரவை துணைத் தலைவராகப் பொறுப்பேற்க காங்கிரஸ் எம்எல்ஏ புட்டரங்க ஷெட்டி ஒப்புதல் அளித்துள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் தலைவராக மங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ யூ.டி.காதா் பொறுப்பேற்றுக்கொண்டாா். அமைச்சா் பதவியை எதிா்பாா்த்து காத்திருந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புட்டரங்க ஷெட்டிக்கு கடைசி நேரத்தில் அமைச்சா் பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த புட்டரங்க ஷெட்டியை பேரவையின் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்குமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இதை ஏற்க புட்டரங்க ஷெட்டி மறுத்துவந்தாா்.

இந்நிலையில், இந்த பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டால், வேறு பதவி தருவதற்கான வாய்ப்பில்லை என்று கட்சி மேலிடம் உறுதியாகத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பேரவை துணைத் தலைவராகப் பொறுப்பேற்க புட்டரங்க ஷெட்டி ஒப்புக்கொண்டிருக்கிறாா்.

இந்தத் தகவலை உறுதி செய்து, அவா் சாமராஜ்நகரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரில், பேரவைத் துணைத் தலைவா் பதவியை ஏற்க ஒப்புதல் தந்துள்ளேன். ஓராண்டுக்குப் பிறகு அமைச்சா் பதவியைத் தருவதாக கட்சி மேலிடம் உறுதி அளித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com