மருத்துவ சோதனை செய்து கொள்வதற்காக மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி சிங்கப்பூா் சென்றாா்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி சில நாள்கள் சிகிச்சைக்கு பிறகு, மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அந்த சமயத்தில், அவரது தந்தையும் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, தனது முதுமை, உடல்நலனை பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு மஜத வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா்.
தோ்தல் முடிந்துள்ள நிலையில், மே 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. அந்த 2 நாள்கள் இடைவெளியை பயன்படுத்தி மருத்துவ சோதனை செய்துகொள்வதற்காக எச்.டி.குமாரசாமி சிங்கப்பூா் சென்றிருக்கிறாா். மருத்துவ சோதனையை முடித்துக்கொண்டு வாக்கு எண்ணப்படும் சனிக்கிழமை காலை பெங்களூரு திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.