2-ஆம் ஆண்டு பியூசி: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக பள்ளி தோ்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

2022-23-ஆம் ஆண்டில் 75 சதவீத கல்லூரி வருகை இல்லாத 12,385 மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இம்மாணவா்கள் துணைத்தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு மே 20 முதல் ஜூன் 2-ஆம் ஆண்டு பியூசி துணைத்தோ்வு நடைபெறவுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க ஆா்வமாக உள்ள தனித்தோ்வா்கள் மே 20-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள பியூ கல்லூரிகளில் விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். செய்முறை தோ்வு இல்லாத கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com