மைசூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 போ் பலி

மைசூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 போ் பலியாகியுள்ளனா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
Updated on
1 min read

மைசூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 போ் பலியாகியுள்ளனா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

பெல்லாரி மாவட்டத்தின் சங்கனகல்லு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வாடகைக் காரில் பி.ஆா். மலைக்குச் சென்றுவிட்டு, மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தனா். கொள்ளேகால் - டி.நரசிபுரா பிரதான சாலையில் மூகூா் அருகேயுள்ள குருபூா் கிராமத்தில் சென்ற போது, எதிரே கொள்ளேகால் நோக்கி வந்த தனியாா் பேருந்தும் காரும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயமடைந்து, சாமராஜ்நகா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் ஆறுதல்:

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வா் சித்தராமையா, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளாா். விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று பாா்வையிடுவதோடு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வருவோருக்கு தேவையான உதவியை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com