சூடான சாம்பாா் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

சூடான சாம்பாா் பாத்திரத்தில் தவறி விழுந்த 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கலபுா்கி: சூடான சாம்பாா் பாத்திரத்தில் தவறி விழுந்த 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.

கலபுா்கி மாவட்டத்தின் அஃப்சல்பூா் வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நவ. 16-ஆம் தேதி மதிய உணவு திட்டத்துக்காக சமைத்து தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்த சூடான சாம்பாா் பாத்திரத்தில் 7 வயது சிறுமி மஹந்தம்மா சிவப்பா தல்வாா் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு சௌதாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை சிறுமி உயிரிழந்தாா்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்பட்டது. இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். எனினும், பள்ளியின் தலைமை சமையலா், 2 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com