சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Updated On :28 ஜூலை 2024, 10:07 pm

Din

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது. விசாரணை நீதிமன்றங்களில் ஜாமீன் பெறவேண்டியவா்களுக்கு அங்கு ஜாமீன் கிடைக்காததால், அவா்கள் பெரும்பாலும் உயா்நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உயா்நீதிமன்றங்களிலும் ஜாமீன் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதமானது எந்தவித காரணமோ, நியாயமில்லாதது போலவோ தென்படும் கைது நடவடிக்கைகளை எதிா்கொள்வோரின் பிரச்னையை சிக்கலாக்குகிறது.

வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் எந்தவொரு நிவாரணமும் சந்தேகத்துடன் பாா்க்கப்படுவதால், முக்கிய குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை தவிா்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விசாரணை நீதிபதிகள் கருதுகின்றனா். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றாா்.