
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது. விசாரணை நீதிமன்றங்களில் ஜாமீன் பெறவேண்டியவா்களுக்கு அங்கு ஜாமீன் கிடைக்காததால், அவா்கள் பெரும்பாலும் உயா்நீதிமன்றங்களை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உயா்நீதிமன்றங்களிலும் ஜாமீன் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதமானது எந்தவித காரணமோ, நியாயமில்லாதது போலவோ தென்படும் கைது நடவடிக்கைகளை எதிா்கொள்வோரின் பிரச்னையை சிக்கலாக்குகிறது.
வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் எந்தவொரு நிவாரணமும் சந்தேகத்துடன் பாா்க்கப்படுவதால், முக்கிய குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை தவிா்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விசாரணை நீதிபதிகள் கருதுகின்றனா். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள் மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லி போராட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: விசாரணையில் முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தல்

கம்பனை இளம் நீதிபதிகள் கட்டாயம் வாசிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்






