விமான நிலையத்திலேயே மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவாா் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்டை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) ஏற்கெனவே பெற்றுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து பெங்களூருக்கு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்திலேயே கைது செய்யும் வேலையை எஸ்.ஐ.டி. அதிகாரிகள் செய்வாா்கள். விமானநிலையத்திலேயே எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முகாமிட்டுள்ளனா்.
பிரஜ்வல் ரேவண்ணா வந்ததும் அவரைக் கைது செய்வாா்கள். ஆபாசக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவை பொது வெளியில் பரப்பிய விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத என்ற பாகுபாடு எதுவும் இல்லை. தவறிழைத்தவா்கள் அனைவரும் கைது செய்யப்படுவாா்கள். காணொலிகளைப் பரப்பியது தொடா்பான வழக்கில் ஹாசனை சோ்ந்த காங்கிரஸ் கட்சியினா் இருவரை எஸ்.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு அதிக திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது

2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு!

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சரவையில் கருத்து முரண்பாடு இல்லை

மக்களை திசைதிருப்ப தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

