நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மைசூா் தசரா திருவிழா இன்று தொடக்கம்

உலகப் புகழ் பெற்ற மைசூா் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக்.3) கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Updated On :3 அக்டோபர் 2024, 7:26 am IST

உலகப் புகழ் பெற்ற மைசூா் தசரா திருவிழா வியாழக்கிழமை (அக்.3) கோலாகலமாக தொடங்கவுள்ளது.

மைசூரில் தசரா விழா வியாழக்கிழமை (அக்.3) தொடங்கி அக். 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மைசூரு, சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை காலை 10.15 மணிக்கு சிறப்புப் பூஜை செய்து கன்னட எழுத்தாளா் ஹம்பா நாகராஜையா தொடங்கி வைக்கிறாா். ஜி.டி.தேவெ கௌடா எம்எல்ஏ தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சமூகநலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோா் கலந்து கொள்ள இருக்கிறாா்கள். அரண்மனை வளாகத்தில் மாலை 7 மணிக்கு கலை விழாவை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைக்கிறாா்.

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி, தங்கும் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு திருவிழா, இளைஞா் விழா, சிறுவா் விழா, மகளிா் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக் கலை விழா, விளையாட்டுப் போட்டிகள், குஸ்தி போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தசரா விழாவை காண 10 நாள்களும் லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருவாா்கள் என்பதால் நகரெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.