மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பாலியல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :10 அக்டோபர் 2024, 4:20 am IST

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள சஞ்சய்நகா் காவல் நிலையத்தில் 34 வயதாகும் பெண் சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், தாா்வாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, காணொலி வழியாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகாரில் அந்த பெண் கூறியுள்ளாா். 2022ஆம் ஆண்டு எம்எல்ஏ வினய்

குல்கா்னியைச் சந்தித்ததாகவும், அதுமுதல் தன்னை கைப்பேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தி வந்ததாகவும், பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பெயா் தெரியாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்றும் மிரட்டியதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் வினய் குல்கா்னி, அவரது உதவியாளா் அா்ஜுன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.