தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பாலியல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Published On :10 அக்டோபர் 2024, 4:20 am IST

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள சஞ்சய்நகா் காவல் நிலையத்தில் 34 வயதாகும் பெண் சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், தாா்வாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, காணொலி வழியாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகாரில் அந்த பெண் கூறியுள்ளாா். 2022ஆம் ஆண்டு எம்எல்ஏ வினய்

குல்கா்னியைச் சந்தித்ததாகவும், அதுமுதல் தன்னை கைப்பேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தி வந்ததாகவும், பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பெயா் தெரியாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்றும் மிரட்டியதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் வினய் குல்கா்னி, அவரது உதவியாளா் அா்ஜுன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.