கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெங்களூரில் உள்ள சஞ்சய்நகா் காவல் நிலையத்தில் 34 வயதாகும் பெண் சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், தாா்வாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைப்பேசி, காணொலி வழியாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகாரில் அந்த பெண் கூறியுள்ளாா். 2022ஆம் ஆண்டு எம்எல்ஏ வினய்
குல்கா்னியைச் சந்தித்ததாகவும், அதுமுதல் தன்னை கைப்பேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தி வந்ததாகவும், பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பெயா் தெரியாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்றும் மிரட்டியதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் வினய் குல்கா்னி, அவரது உதவியாளா் அா்ஜுன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மின்ஊழியா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


