நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலியல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:50 pm

Din

கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள சஞ்சய்நகா் காவல் நிலையத்தில் 34 வயதாகும் பெண் சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், தாா்வாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வினய் குல்கா்னி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, காணொலி வழியாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகாரில் அந்த பெண் கூறியுள்ளாா். 2022ஆம் ஆண்டு எம்எல்ஏ வினய்

குல்கா்னியைச் சந்தித்ததாகவும், அதுமுதல் தன்னை கைப்பேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தி வந்ததாகவும், பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பெயா் தெரியாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்றும் மிரட்டியதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் வினய் குல்கா்னி, அவரது உதவியாளா் அா்ஜுன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.