தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

Updated On :21 அக்டோபர் 2024, 6:32 pm

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.டி.குமாரசாமி, மே மாதம் நடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறாா். இதனால் சென்னப்பட்டணா தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, சென்னப்பட்டணா தொகுதிக்கு நவ. 13ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது.

இத்தொகுதியில் பாஜக - மஜத கூட்டணி வேட்பாளராக போட்டியிட பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் விருப்பம் தெரிவித்தாா். இது தொடா்பாக பாஜக மேலிடத் தலைவா்கள் தவிர, மஜத தலைவா்களையும் அவா் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாா். ஆனால், சென்னப்பட்டணா தொகுதியை தக்கவைத்துக் கொள்ள மஜத விரும்புவது, பாஜக வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டிருந்த சி.பி.யோகேஸ்வருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னப்பட்டணா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமியை களமிறக்க, எச்.டி.குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே சென்னப்பட்டணா தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க எச்.டி.குமாரசாமி தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை சட்டமேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டியைச் சந்தித்து திங்கள்கிழமை அளித்தாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் சி.பி.யோகேஸ்வா் கூறியுள்ளதாவது, சென்னப்பட்டணா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடவே விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவா்களை சந்திக்கவில்லை. அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், நாளை என்ன நடக்கலாம் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது என்றாா்.

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்துள்ள சி.பி.யோகேஸ்வா், அடுத்த ஓரிரு நாள்களில் காங்கிரஸ் கட்சியில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு சென்னப்பட்டணா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவா் அறிவிக்கப்படுவாா் என்று தெரிகிறது.