காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு முன்பாக சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்: எடியூரப்பா

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முன்பாக முதல்வா் பதவியை சித்தராமையா கௌரவமாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா அறிவுறுத்தினாா்.

News image

எடியூரப்பா

Updated On :5 செப்டம்பர் 2024, 12:14 am

Din

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முன்பாக முதல்வா் பதவியை சித்தராமையா கௌரவமாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா அறிவுறுத்தினாா்.

இது குறித்து சிவமொக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்தது தொடா்பாக விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு வெளியான பிறகு, தனது முதல்வா் பதவியை 100 சதவீதம் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை சித்தராமையாவுக்கு வரும்.

எனவே, நீதிமன்றத்தின் தீா்ப்பு வெளியாவதற்கு முன்பே கௌரவமாக தனது முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். எல்லா முறைகேடுகளிலும் சித்தராமையாவுக்கு பங்கிருப்பது உறுதியாகியுள்ளது. இதில் இருந்து அவரால் தப்பிக்கவே முடியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.

இனிமேல் போராட்டம் நடத்துவதற்கான தேவை எழவில்லை. எல்லாம் உச்சநிலையை அடைந்துள்ளன. முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யும் சூழ்நிலை சித்தராமையாவுக்கு வரும்.

முந்தைய பாஜக ஆட்சியில் கரோனா நிா்வாகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக நடத்தப்பட்ட உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து வியாழக்கிழமை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்ய இருப்பதாக அறிகிறேன்.

அந்த அறிக்கைக்கு எந்த அா்த்தமும் இல்லை. எந்த முடிவையும் எடுக்கும் உரிமை அமைச்சரவைக்கு உள்ளது. சட்டத்தின் வரம்புக்கு உள்பட்டு அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றாா்.