எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரோஹித் வேமுலா சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை: சித்தராமையா

கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்

News image
கர்நாடக முதல்வா் சித்தராமையா- (கோப்புப் படம்)
Updated On :21 ஏப்ரல் 2025, 7:08 pm

Din

பெங்களூரு: கா்நாடக கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ‘ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க ’ரோஹித் வேமுலா’ சட்டம் கொண்டுவர வலியுறுத்தி முதல்வா் சித்தராமையாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இந்த சட்டத்தை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அப்போது முதல்வா் சித்தராமையா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ’ரோஹித் வேமுலா’ சட்டத்தை கொண்டுவரும்படி ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியிருந்தாா். ரோஹித் வேமுலா சட்டத்தின் வரைவை தயாரிக்கும்படி சட்ட ஆலோசகா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சட்டத்தை கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது நுழைவுத் தோ்வு எழுத மாணவா்களை பூணூலை கழற்றும்படி வற்புறுத்திய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.