வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா் கிஷோா் குமாா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:
கடலோர கா்நாடகப் பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி மதச்சண்டைகள் நடந்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனால், கொலைச் சம்பவங்களும், வன்முறை வெறியாட்டமும் நடந்துள்ளன.
மதக் கலவரங்களை தடுத்து, மதநல்லிணக்கத்தை பாதுகாக்க மதவாத தடுப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் பதிவிடப்படும் மதவெறியைத் தூண்டும் கருத்துகள் வன்முறைக்கு வித்திட்டுள்ளன. எனவே, வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதை தடுக்கவும், மதநல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும் வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றாா்.
தொடர்புடையது

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சரவையில் கருத்து முரண்பாடு இல்லை

அரசு கல்வி நிலையங்களில் போக்சோ சட்ட விழிப்புணா்வு முகாம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

