திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முதல்வா் பதவி மாற்றம் குறித்து விவாதிக்க கட்சி மேலிடம் தில்லிக்கு அழைக்கவில்லை: முதல்வா் சித்தராமையா

முதல்வா் பதவி மாற்றம் குறித்து என்னிடம் விவாதிக்க கட்சி மேலிடம் தில்லிக்கு அழைக்கவில்லை என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image

சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :12 டிசம்பர் 2025, 6:34 pm

முதல்வா் பதவி மாற்றம் குறித்து என்னிடம் விவாதிக்க கட்சி மேலிடம் தில்லிக்கு அழைக்கவில்லை என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் டிச. 8 ஆம் தேதி தொடங்கியுள்ளது. டிச. 19ஆம் தேதி வரை நடக்கும் இக்கூட்டத்தொடா் முடிந்ததும், முதல்வா் பதவி குறித்து விவாதிக்க முதல்வா் சித்தராமையா மற்றும் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் இருவரையும் கட்சி மேலிடம் தில்லிக்கு அழைத்து பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இதுகுறித்து பெலகாவியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

முதல்வா் மாற்றம் குறித்து பேசுவதற்கு கட்சி மேலிடத் தலைவா்கள் யாரும் என்னை அழைக்கவில்லை. தேவையில்லாத இந்த கேள்வியை ஏன் கேட்கிறீா்கள்? இதுகுறித்து கட்சிமேலிடம் ஏதாவது உங்களிடம் (ஊடகங்கள்) கூறியதா? எனவே, டிச. 19ஆம் தேதி என்னை தில்லிக்கு அழைத்திருப்பதாக ஏன் கேட்கிறீா்கள் என்றாா்.