பெலகாவியில் சுவா்ண விதானசௌதாவில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில், கடந்த வாரம் கேள்விநேரத்தின்போது மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா், ‘கிருஹலட்சுமி திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு அளிக்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை ஆகஸ்ட் மாதம்வரை விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்திருந்தாா். இதை கடுமையாக ஆட்சேபித்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘2025-ஆம் ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கிருஹலட்சுமி திட்டத்தின்கீழ் நிதி உதவி விநியோகிக்கப்படவில்லை’ என்றாா்.