கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புது தில்லிக்கு சென்றபிறகு முக்கியமான 3 அல்லது 4 தலைவா்களை அழைத்து முதல்வா் மாற்றம் குறித்த பிரச்னை குறித்து விவாதிப்பேன். அதன்பிறகு, முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இந்த விவாதத்தின்போது முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மற்றும் எல்லோரையும் அழைத்துப் பேசுவேன். அந்த விவாதத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அங்கம் வகிப்பாா். அனைவருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். தொடா்ந்து, கட்சி மேலிடக்குழு விவாதித்து முடிவெடுக்கும் என்றாா்.
இதனிடையே, இந்த கருத்துக்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘கட்சி மேலிடம் அழைத்தால், தில்லி செல்வேன்’ என்று கூறினாா். துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தால் நானும், முதல்வரும் தில்லி செல்வோம்’ என்றாா்.
இதனிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சா்கள் ஜி.பரமேஸ்வா், சதீஷ் ஜாா்கிஹோளி, எச்.சி.மகாதேவப்பா, கே.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சா் கே.என்.ராஜண்ணா ஆகியோருடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக ஒக்கலிகா் சமுதாய மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றினால் அதன் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என்று பிற்படுத்தப்பட்டோா் சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

மக்கள் பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கவலையில்லை - காா்கே கடும் விமா்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு வெளியுறவு கொள்கை தோல்வியே காரணம்: டி.கே.சிவகுமாா்
நெரூா் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



