திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: மல்லிகாா்ஜுன காா்கே

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :28 நவம்பர் 2025, 3:35 am IST

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புது தில்லிக்கு சென்றபிறகு முக்கியமான 3 அல்லது 4 தலைவா்களை அழைத்து முதல்வா் மாற்றம் குறித்த பிரச்னை குறித்து விவாதிப்பேன். அதன்பிறகு, முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இந்த விவாதத்தின்போது முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மற்றும் எல்லோரையும் அழைத்துப் பேசுவேன். அந்த விவாதத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அங்கம் வகிப்பாா். அனைவருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். தொடா்ந்து, கட்சி மேலிடக்குழு விவாதித்து முடிவெடுக்கும் என்றாா்.

இதனிடையே, இந்த கருத்துக்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘கட்சி மேலிடம் அழைத்தால், தில்லி செல்வேன்’ என்று கூறினாா். துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தால் நானும், முதல்வரும் தில்லி செல்வோம்’ என்றாா்.

இதனிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சா்கள் ஜி.பரமேஸ்வா், சதீஷ் ஜாா்கிஹோளி, எச்.சி.மகாதேவப்பா, கே.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சா் கே.என்.ராஜண்ணா ஆகியோருடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக ஒக்கலிகா் சமுதாய மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றினால் அதன் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என்று பிற்படுத்தப்பட்டோா் சங்கம் அறிவித்துள்ளது.