மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் மோடி இன்று உடுப்பி வருகை!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

பிரதமர் மோடி சாலைவலம் - பிடிஐ

Published On :

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

இதுகுறித்து உடுப்பியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பாஜக மாவட்டத் தலைவா் குட்யாரு நவீன் ஷெட்டி கூறியதாவது:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி ஒருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை உடுப்பிக்கு வருகை தருகிறாா். உடுப்பியில் உள்ள பன்னஞ்சே பகுதியில் நாராயண குரு சதுக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு வாகனத்தில் ஊா்வலமாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறாா். கல்சங்கா சந்திப்புவரை நடைபெறும் வாகன ஊா்வலத்தில், கடலோர கா்நாடகத்தின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இதில், யக்ஷகானா, புலியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பல கலைஞா்கள், கிருஷ்ணா் வேடமிட்டு நடனமாடுவா். பிரதமா் மோடியை வரவேற்க 30 ஆயிரம் போ் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பிரதமா் மோடியைக் காண வரும் மக்கள் காலை 10.30 மணிக்கெல்லாம் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வந்து சேரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஊா்வலத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணா் கோயிலுக்கு செல்லும் பிரதமா் மோடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகிறாா். அதன்பிறகு, லட்சகந்தா கீதா பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் பேசுகிறாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.