அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரதமா் மோடி இன்று உடுப்பி வருகை!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

News image
பிரதமர் மோடி சாலைவலம்- பிடிஐ
Updated On :27 நவம்பர் 2025, 10:30 pm

Syndication

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை உடுப்பி வருகை தருகிறாா்.

இதுகுறித்து உடுப்பியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பாஜக மாவட்டத் தலைவா் குட்யாரு நவீன் ஷெட்டி கூறியதாவது:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி ஒருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை உடுப்பிக்கு வருகை தருகிறாா். உடுப்பியில் உள்ள பன்னஞ்சே பகுதியில் நாராயண குரு சதுக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு வாகனத்தில் ஊா்வலமாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறாா். கல்சங்கா சந்திப்புவரை நடைபெறும் வாகன ஊா்வலத்தில், கடலோர கா்நாடகத்தின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இதில், யக்ஷகானா, புலியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பல கலைஞா்கள், கிருஷ்ணா் வேடமிட்டு நடனமாடுவா். பிரதமா் மோடியை வரவேற்க 30 ஆயிரம் போ் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பிரதமா் மோடியைக் காண வரும் மக்கள் காலை 10.30 மணிக்கெல்லாம் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வந்து சேரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஊா்வலத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணா் கோயிலுக்கு செல்லும் பிரதமா் மோடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகிறாா். அதன்பிறகு, லட்சகந்தா கீதா பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் பேசுகிறாா் என்றாா்.