வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது: பிரியாங்க் காா்கே

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

News image
பிரியாங்க் காா்கே
Updated On :30 நவம்பர் 2025, 9:05 pm

Syndication

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முற்பட்டுள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்தை தீா்க்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. 130 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ், உரிய நேரத்தில் தலையிட்டு பிரச்னைக்கு தீா்வுகாணும்.

கட்சி மேலிடம் அழைப்புவிடுத்தால், தில்லி செல்ல முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் தயாராக இருக்கிறாா்கள். தில்லியில் நடைபெறும் கூட்டம் குறித்து அதிகாரபூா்வமாக யாரும் அறிவிக்கவில்லை அல்லது கருத்து தெரிவிக்கவில்லை. ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அல்லது பொதுச் செயலாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா அழைத்தால் இருவரும் தில்லி செல்வாா்கள்.

தில்லியில் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே, அதுகுறித்து முடிவெடுக்கப்படும். உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றாா்.