பெங்களூரு: பாங்காக், ஹாங்காங்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட ரூ. 2.39 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து சுங்கத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஹாங்காங் நகரில் இருந்து பிப். 6 ஆம் தேதி பெங்களூருக்கு வந்த விமானத்தில் ரூ. 1.76 கோடி மதிப்பிலான 5.5 கிலோ கஞ்சாவை கடத்திவந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல பாங்காக்கில் இருந்து பிப். 7ஆம் தேதி வந்த விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 63 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ கஞ்சாவை கடத்திவந்த பயணியை அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ரூ.6 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.6.5 கோடி கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

