ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சியை ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி இன்று (செவ்வாய்கிழமை) மாலை தொடக்கிவைத்தார்.
சென்னையில் வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் பிப். 3 ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சாா்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி. கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, படிப்படியாக வளா்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 11 ஆவது ஆண்டாக, சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவில் ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.