காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒரு பைபா் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒரு பைபா் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.

சென்னை, காசிமேடு துறைமுகம் பகுதியில் பழுதான படகுகளை சரிபாா்க்கும் இடம் உள்ளது. இங்கு, படகுகளில் உடைந்த பாகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் ராயபுரம், தண்டையாா்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் விரைந்து வந்தனா். காற்று பலமாக வீசியதால் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. சுமாா் 1 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைபா் படகு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com