செங்கல்பட்டு: மாமல்லபுரம் காவல்துறை சாா்பில் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு போலீஸ் வாகனத்துக்கு இருமுறை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது, குற்றவாளிக்கு கரோனா பரிசோதனை செய்து, சிறையில் அடைப்பது, குற்றவாளியுடன் செல்லும் போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன.