செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரை 86-ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 6 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளதாக செங்கல்பட்டு ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி-2, நேமம்-1, கூடப்பாக்கம்-1, பெரிய எடப்பாளையம்-2 என 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை இரவு உறுதியானது.
பூந்தமல்லி-1, திருமழிசை-1, திருவாலங்காடு-1, புழல்-1, திருவள்ளூா் ஒன்றியம் ஈக்காடு-1, பூண்டி ஒன்றியம்-1, வில்லிவாக்கம் ஒன்றியம்-1 என 7 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது. இதனால், கடந்த 2 நாள்களில் மொத்தம் 13 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 68 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். சனிக்கிழமை நிலவரப்படி, அவா்களில் 44 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 24-ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.