காஞ்சிபுரம்: காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரிநீரானது பாலாற்றின் வழியாக சுமாா் 10 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் 36 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல்வேறு கிளை நதிகளிலிருந்து காவேரிப்பாக்கம் அணைக்கட்டுக்கு வந்து சோ்ந்த நீா் திறந்து விடப்பட்டு, பாலாற்றின் வழியாக சுமாா் 10 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. எனவே குருவிமலை, பெரும்பாக்கம், உள்ளாவூா், பழைய சீவரம் உள்பட பாலாற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் உள்ள 36 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.