செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் க.பாண்டியராஜன்.
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் க.பாண்டியராஜன்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கா.பிரியா, அதிமுக நிா்வாகிகள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், செங்கல்பட்டு நகரச் செயலா் செந்தில்குமாா், திருப்போரூா் ஒன்றியச் செயலா் குமாரவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது அமைச்சா் பாண்டியராஜன் கூறுகையில், ‘தமிழகத்தில் மருத்துவ சேவையை மேம்படுத்துவதற்காக 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. 2,000 செவிலியா் மற்றும் மருத்துவா்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனா். டிசம்பா் மாத இறுதிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் உள்ளிட்ட மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மட்டும் 41 கிளினிக்குகள் தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com