கருங்குழியில் 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், முக்கிய 7 இடங்களில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கருங்குழியில் 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், முக்கிய 7 இடங்களில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கருங்குழி பேரூராட்சியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களைத் தடுக்க, அப்பகுதி சமூக தொண்டா்களின் மூலம் பவழக்காரத் தெரு, பாட்டைத் தெரு, நாவிதா் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் ரூ. 1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் டிஎஸ்பி என்.கவிநா தலைமை வகித்துத தொடக்கி வைத்தாா். கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com